திருச்சி: வீட்டின் பூட்டை உடைத்து 190 சவரன் கொள்ளை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறையை அடுத்த வி-இடையப்பட்டியில் முத்துப்பாண்டி என்பவர் தனது தாயார் சுப்புலட்சுமியுடன் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முத்துப்பாண்டி வெளியூர் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சுப்புலட்சுமி வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியுள்ளார். இதையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 190 சவரன் நகை, ரூ. 50,000 ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications