ஓகி புயலில் சிக்கி 194 மீனவர்களை காணவில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் தகவல்!
ஓகி புயலில் சிக்கி 194 மீனவர்கள் மாயமாகியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓகி புயலில் சிக்கி 194 மீனவர்கள் மாயமாகியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓகி புயலால் காணாமல் போன 194 மீனவர்கள் தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஓகி புயலால் காணாமல்போன மீனவர்களை ஜனவரி முதல் வாரத்தில் மாலத்தீவுபகுதியில் தேடியதாக கூறினார்.

காணாமல்போன மீனவர்கள் 15 நாட்களுக்குள் திரும்பாவிட்டால் உயிரிழந்தவர்களாக கருதப்படுவார்கள் என்ற அவர், ஓகி புயலால் 194 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக கூறினார்.
மேலும் 25 மீனவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் ஓகி புயலால் காணாமல் போன 194 மீனவர்கள் தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications