நெல்லை காவலர் கொலை சம்பவம்: 2 பேர் கைது.. முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு

காவலர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நெல்லை மாவட்டத்தில் மணல் மாபியாயாக்களால் போலீஸ்காரர் அடித்து கொலை!

    நெல்லை: நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் வலைவீசியுள்ளனர்.

    வள்ளியூர் அருகே விஜயநாராயணம் சிற்றாற்று பகுதியில் இரவு நேரத்தில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மணல் கொள்ளை குறித்து விசாரிக்க சிறப்பு பிரிவு காவலர் ஜெகதீசன் அங்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.

    2 arrest for Nellai Police death

    ஆனால் பணிக்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை என்று சக காவலர்கள் அவரை தேடி ஆற்றுப்பகுதிக்கு வந்து பார்த்தனர். அப்போது மணல் கொள்ளையர்கள் சிலர் இரும்பு கம்பிகளை கொண்டு ஜெகதீசனை அடித்துக் கொலை செய்யப்பட்டு தப்பியோடிவிட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, ஜெகதீசனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்து படுகொலை குறித்த விசாரணையை கையிலெடுத்தனர். அதன்படி கைப்பற்றப்பட்ட டிராக்டர் தாமரைகுளம் கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து மணல் அள்ளிச்சென்ற கிருஷ்ணன் 50, முருகபெருமாள் 21 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான முருகன் உள்ளிட்ட சிலர் தேடப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரிடம் விசாணை நடத்தப்பட்டு, கொலையாளிகள் அனைவரையும் விரைவில்கைது செய்வோம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+