தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறிப்பு- 2 பேரை மடக்கி பிடித்த பொதுமக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்களிடம் செயின் பறிக்க முயன்ற 2 பேரை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஓப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தன. குறிப்பாக தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மணி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த ஒரு பெண் அவரது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக நடந்த வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டு முன்பு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகையை பறிக்க முயன்றார்.
சுதாரித்து கொண்ட அந்த பெண் கூச்சலிட்டவாறே போராடியுள்ளார். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை மத்திய பாகம் போலீசில ஓப்படைத்தனர்.
அவரிடம் இன்ஸ்பெக்டர் ரேணியல் ஜேசுபாதம் விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணி நகரை சேர்ந்த இசக்கிமுத்து என்பது தெரிய வந்தது.
இதே போல் அதே பகுதியை சேர்ந்த சந்தனசெல்வி என்பவரும் மாலை கடைக்கு சென்று விட்டு வீடு திரு்ம்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபர் அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார்.
சுதாரித்து கொண்ட சந்தனசெல்வி அந்த நபரின் சட்டையை கெட்டியாக பிடித்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து வடபாகம் போலீசில் ஓபபடைத்தனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்ட முயன்றவர்களை பொதுமக்களை மடக்கி பிடித்த போலீசில் ஓப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அங்கு போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications