முட்புதரில் இறந்து கிடந்த பிறந்து இரண்டே நாளான ஆண் குழந்தை.. நெல்லையில் கொடூரம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது. பச்சிளம் குழந்தை முட்புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு (ஜங்ஷன்), கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள முற்புதரில் பிறந்து 2நாட்களே ஆன ஆண் குழந்தையை மர்ம நபர்கள் வீசி சென்று உள்ளனர்.

இறந்த நிலையில் கிடந்த குழந்தையை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த குழந்தையின் போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
பொதுவாக பெண் குழந்தைகளை இப்படி வீசிச் செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், ஆண் குழந்தையை வீசியது ஏன் என்பது புரியவில்லை என்றும், போலீசார் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications