சிவகாசி : பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் படுகாயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சில அறைகள் தரைமட்டமானதில் 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான தனியார் பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் இன்று சிவகாசி அருகே புதுப்பட்டியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது. வெடிவிபத்தை தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன. அறைக்குள் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடி விபத்து பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications