வீடு புகுந்து துணிகரம்.. செல்போன் திருடிய இருவர் கைது
வீடு புகுந்து செல்போன் திருடிய இருவர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: வீட்டில் இருந்த செல்போனை திருடிய இரண்டு பேரை போலீசார் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நெய்னார் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம். டிப்ளமோ படித்துள்ள இவர் சம்பவத்தன்று இரவில் கம்ப்யூட்டர் பார்த்துவிட்டு வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கி விட்டதாக தெரிகிறது.

வழக்கம் போல் அதிகாலையில் இப்ராகிம் எழுந்து பார்த்த போது வீட்டின் மேஜையில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ந்தார். உடனே அவர் வீடு முழுவதும் தேடினார். செல்போன் கிடைக்கவில்லை. பின்னர், வாசல் அருகே வந்து பார்த்த போது, இருவர் அங்கு நின்று கொண்டிருந்தனர். சந்தேகப்பட்ட இப்ராகிம் உடனடியாக அவர்கள் அருகில் சென்ற போது, இவர்கள் இரண்டு பேரும் தப்பி ஓட முயன்றனர். விரைந்து சென்ற அவர் என்னுடைய வீட்டில் நுழைந்து செல்போனை எடுத்தீர்களா? என கேட்டிருக்கிறார்.
இதற்கிடையே இப்ராகிம் உறவினர்கள் சிலரும் அங்கு வந்துள்ளனர். பிடிபட்ட இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்கள். இதனார் அவர்கள் இருவரையும் ஆறுமுகநேரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, பிடிபட்ட நபர்கள் காயல்பட்டினம் சீதக்காதி நகரை சேர்ந்த முகம்மது அப்துல்காதர் சாகுல் ஹமீது, பரிமார் தெருவை சேர்ந்த சேகு நூர்தீன் என்பது தெரிய வந்தது. இவர்கள் இப்ராகிம் வீட்டில் செல்போனை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications