வீடு புகுந்து துணிகரம்.. செல்போன் திருடிய இருவர் கைது
வீடு புகுந்து செல்போன் திருடிய இருவர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: வீட்டில் இருந்த செல்போனை திருடிய இரண்டு பேரை போலீசார் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நெய்னார் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம். டிப்ளமோ படித்துள்ள இவர் சம்பவத்தன்று இரவில் கம்ப்யூட்டர் பார்த்துவிட்டு வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கி விட்டதாக தெரிகிறது.

வழக்கம் போல் அதிகாலையில் இப்ராகிம் எழுந்து பார்த்த போது வீட்டின் மேஜையில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ந்தார். உடனே அவர் வீடு முழுவதும் தேடினார். செல்போன் கிடைக்கவில்லை. பின்னர், வாசல் அருகே வந்து பார்த்த போது, இருவர் அங்கு நின்று கொண்டிருந்தனர். சந்தேகப்பட்ட இப்ராகிம் உடனடியாக அவர்கள் அருகில் சென்ற போது, இவர்கள் இரண்டு பேரும் தப்பி ஓட முயன்றனர். விரைந்து சென்ற அவர் என்னுடைய வீட்டில் நுழைந்து செல்போனை எடுத்தீர்களா? என கேட்டிருக்கிறார்.
இதற்கிடையே இப்ராகிம் உறவினர்கள் சிலரும் அங்கு வந்துள்ளனர். பிடிபட்ட இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்கள். இதனார் அவர்கள் இருவரையும் ஆறுமுகநேரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, பிடிபட்ட நபர்கள் காயல்பட்டினம் சீதக்காதி நகரை சேர்ந்த முகம்மது அப்துல்காதர் சாகுல் ஹமீது, பரிமார் தெருவை சேர்ந்த சேகு நூர்தீன் என்பது தெரிய வந்தது. இவர்கள் இப்ராகிம் வீட்டில் செல்போனை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications