திருவள்ளூர் அருகே காரில் கடத்தி வந்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்.. 2 பேர் அதிரடி கைது
காரில் கடத்தி வந்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ செம்மரக்கட்டைகள் போலீசார் திருவள்ளூர் அருகே பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திராவிலிருந்து செம்மரக்கட்டைகள் காரில் கடத்தி சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் அருகே எளாவூரில் வாகன சோதனை பலப்படுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்திய போலீசார் அவற்றினை சோதனை செய்தனர்.
அதில், 300 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றினை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்டவிசாரணையில், தங்களது பெயர் சுரேஷ்பாபு, பாலச்சந்தர் என்பதும், ஆந்திராவிலிருந்து கடத்தி விற்பதற்காக செம்மரக்கட்டைகளை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.