நெல்லையில் பட்டப்பகலில் கொடூரம்... ஓடும் பேருந்தில் அண்ணன், தம்பி வெட்டிப் படுகொலை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் அண்ணன், தம்பி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புடைமருதூரை சேர்ந்தவர்கள் மாரியப்பன், சுப்பிரமணி சகோதரர்கள். முன்னதாக திருப்புடைமருதூரில் சில மாதங்களுக்கு முன்பு கண்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். கண்ணன் கொலை வழக்கில் மாரியப்பன், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கண்ணன் கொலை வழக்கு தொடர்பாக மாரியப்பன், சுப்பிரமணி ஆகிய இருவரும் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வீரவநல்லூரில் ஓடும் பேருந்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் கண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பழிக்கு பழியாக இந்த படுகொலை நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 15 கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications