சீருடைய அயர்ன் செய்தபோது ஷாக் அடித்து பிளஸ்டூ மாணவன் பரிதாப மரணம்
சென்னை: சென்னை அருகே பள்ளிச் சீருடையை அயர்ன் செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பிளஸ்டூ மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை வேளச்சேரி அருகே மேடவாக்கம் சின்ன கோவிலம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரூபன். பெயிண்டரான இவரது மகன் அருள் பிரகாஷ் (17). இவர் மேடவாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தனது சீருடையை இஸ்திரி செய்து கொண்டு இருந்தார். அப்போது, இஸ்திரி பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி அருள் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் சமையலை முடித்து விட்டு வந்த அருள் பிரகாஷின் தாயர் மகனைக் காணாமல் தேடியுள்ளார். அப்போதுதான் பிரகாஷ் ஷாக் அடித்து உயிரிழந்து கிடந்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து சென்று அருள் பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications