For Daily Alerts
Just In
பெரம்பலூர் ஸ்டூடியோவில் இளைஞர் கொலை... 2 பேர் சரண்
பெரம்பலூர்: பெரம்பலூரில் ஸ்டூடியோ ஒன்றில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில், 2 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
பெரம்பலூரை அடுத்த ஊட்டத்தூரைச் சேர்ந்தவர் சத்யா, இவர், பெரம்பலூரில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் ஸ்டுடியோவில் பணிபுரிந்து வந்தார்.
இன்று காலை அவர் பணியில் இருந்தபோது, ஸ்டுடியோவிற்கு வந்த மர்ம நபர்கள் இருவர், அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினர்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரபு,பன்னீர் ஆகிய 2 பேர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் தாங்கள்தான் அவரை கொலை செய்த தாக கூறி சரணடைந்தனர்.
அவர்கள் இருவரையும் நீதிபதி காவலில் வைக்க உத்திரவிட்டார்.
Comments
English summary
2 persons surrendered before Perambalur court in a murder case today.
Story first published: Friday, December 5, 2014, 17:11 [IST]