நெல்லையில் 2 கட்டிட தொழிலாளர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: திருநெல்வேலி டவுன் சாலியர் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி டவுன் சாலியர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடிட்ட தொழிலாளர்களான சண்முகம், மாரியப்பன், ராஜ்குமார் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து சராமரியாக வெட்டினர்.

இதில் மாரியப்பன், சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த ராஜ்குமார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்கும் வரை கொலையானோர் உடல்களை எடுத்துச் செல்ல முடியாது என உறவினர்கள் மறுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications