தமிழகத்தில் 20 கம்பெனி துணை ராணுவம் குவிப்பு ஏன்? பெரிய அளவில் ரெய்டுக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வருமான வரித்துறையினரின் சோதனையை அடுத்து மேலும் 20 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தலைமை செயலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து அங்கும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வருமான வரி அலுவலகத்திலும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

ராம மோகன் ராவ் வீடு, அவரது மகனின் வீடு, அலுவலகம் என்று தலைமைச்செயலகம் வரை சோதனை நீண்டது. அவரைத்தொடர்ந்து சேலம் கூட்டுறவு வங்கி, கடலூர் கூட்டுறவு வங்கி என்று சோதனை தொடர்கிறது. இதனைத்தொடர்ந்து பல அரசியல் பிரமுகர்களின் வீடுகளிலும், அரசு உயர் அதிகாரிகளிடமும் சோதனை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 20 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரணமான முறையில் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டதா அல்லது தமிழகத்தில் பெரிய அளவில் வருமான வரித்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ராம மோகன் ராவிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள லேப்டாப், டைரியில் இருந்து கிடைத்துள்ள முக்கிய தகவல்கள் மூலம் வருமான வரித்துறையினரின் அடுத்த நகர்வு யாரை நோக்கியதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை பெரிய இடத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடைபெறும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கவே, துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
20 Company paramilitary force arrived to TamilNadu, IT raid continued in TamilNadu.
60 words
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 20 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications