கணவரை ஒரு அறையில் பூட்டிவிட்டு தாய் வயது பெண்ணை சீரழித்த வாலிபர்
சென்னை: மாதவரத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கட்டிட வேலை செய்யும் பெண்ணை வாலிபர் ஒருவர் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 42 வயதாகும் அவர் தனது கணவருடன் சென்னையை அடுத்து உள்ள மாதவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். பொன்னியம்மன் மேடு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்கிற பிரகாஷ் (20) என்பவர் ஜோதி வேலைக்கு செல்கையில் பார்த்து அவர் மீது ஆசை கொண்டார்.

ஜோதியை அடைய நினைத்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வந்தார். அப்போது அவர் ஜோதியின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் சில்மிஷம் செய்தார். இதை பார்த்த அவரின் கணவரை பிரகாஷ் கத்தியை காட்டி மிரட்டி ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டார்.
அதன் பிறகு பிரகாஷ் ஜோதியை வெறித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் பற்றி ஜோதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
வாலிபர் ஒருவர் வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications