குண்டர் சட்டத்தில் கைதான 212 பேருக்கு விடுதலை
சென்னை: குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 212 பேர் தமிழகத்தில் விடுதலையாக உள்ளனர்.
பெரிய அளவிலான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது வழக்கம். ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளதால் இந்த சட்டப்பிரிவின்கீழ் கைதானவர்கள் பாடு அதோகதிதான். தமிழகத்தில் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையிலுள்ள கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் தனபாலன் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோரை கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், 157 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், 55 மீதான நடவடிக்கைகளை அறிவுரைக் கழகம் ரத்து செய்ததையும் ஏற்றுக்கொண்டது. இதனால் குண்டர் சட்டத்தின்கீழ் கைதானவர்கள் 212 பேர் விடுதலை செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications