ஓகி புயலால் வெள்ளப்பெருக்கு.. சுசீந்திரம் அருகே கோசாலையில் இருந்த 25 மாடுகள் மூழ்கி உயிரிழப்பு!
ஓகி புயலால் கன்னியாகுமரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோசாலையில் இருந்த 25 மாடுகள் உயிரிழந்தன.
கன்னியாகுமரி: ஓகி புயலால் கன்னியாகுமரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோசாலையில் இருந்த 25 மாடுகள் உயிரிழந்தன.
கன்னியாகுமரி அருகே நேற்று முன்தினம் மையம் கொண்டிருந்த ஓகி புயல் தென் தமிழகத்தை புரட்டிப்போட்டது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடானது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தனித்தீவானது. இடுப்பளவுக்கு ஏற்பட்ட வெள்ளத்தால் மின்சாரம் போக்குவரத்து என அனைத்தும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் சுசீந்திரம் அருகே மழைநீரில் மூழ்கி 25 மாடுகள் உயிரிழந்துள்ளன. உதிரப்பட்டியில் உள்ள கோசாலையில் வெள்ள நீர் புகுந்ததில் மாடுகள் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாடுகள் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.