சென்னையில் 8 நகைக்கடையில் ஒரே நாளில் ரூ. 25கோடிக்கு நகை விற்பனை- 2வது நாளாக ஐடி ரெய்ட்
சென்னை பாரிமுனையில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் கணக்கில் காட்டப்படாதவை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ரூ. 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு 8 நகைக்கடைகளில் விடிய விடிய வியாபாரம் நடந்தது. நகைக்கடையில் வருமானவரித்துறை சோதனையில் ரூ. 25 கோடிக்கு நகை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. நகை விற்பனை செய்யப்பட்டதற்கான ரசீதுகளை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளது.

நாடு முழுவதும் ரூ.500, ரூ.1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். மேலும், அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார் மோடி. நவம்பர் 9ம் தேதியன்றி வங்கிகள் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், ஏடிஎம் மையங்கள் 9, 10 ஆகிய இரு தினங்கள் இயங்காது என்றும் அறிவித்தார் மோடி.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதியன்று இரவு சென்னையில் பல நகைக்கடைகளில் மக்கள் குவிந்தனர். தங்களிடம் உள்ள பணத்தை மொத்தமாக கொடுத்து நகைகளை வாங்கிச் சென்றனர்.
கறுப்பு பணம் எல்லாம் கறுப்பு தங்கமாக மாறியது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு தகவல்கள் சென்றதைத் தொடர்ந்து, சென்னையில் பல இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டன.
பாரிமுனை என்எஸ்சி போஸ் ரோட்டில் நேற்று மாலை 6 மணியளவில் பாத்திமா ஜூவல்லரி, தனலட்சுமி ஜூவல்லரி, விக்னேஷ் ஜூவல்லரி, கவுதம் ஜெயின் ஜூவல்லரி உட்பட 10க்கும் மேற்பட்ட நகைகடைகளில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத பணம், முக்கிய ஆவணங்களை வருமான துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. நகைக்கடையில் வருமானவரித்துறை சோதனையில் ரூ. 25 கோடிக்கு நகை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. நகை விற்பனை செய்யப்பட்டதற்கான ரசீதுகளை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications