சென்னையில் 8 நகைக்கடையில் ஒரே நாளில் ரூ. 25கோடிக்கு நகை விற்பனை- 2வது நாளாக ஐடி ரெய்ட்
சென்னை பாரிமுனையில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் கணக்கில் காட்டப்படாதவை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ரூ. 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு 8 நகைக்கடைகளில் விடிய விடிய வியாபாரம் நடந்தது. நகைக்கடையில் வருமானவரித்துறை சோதனையில் ரூ. 25 கோடிக்கு நகை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. நகை விற்பனை செய்யப்பட்டதற்கான ரசீதுகளை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளது.

நாடு முழுவதும் ரூ.500, ரூ.1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். மேலும், அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார் மோடி. நவம்பர் 9ம் தேதியன்றி வங்கிகள் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், ஏடிஎம் மையங்கள் 9, 10 ஆகிய இரு தினங்கள் இயங்காது என்றும் அறிவித்தார் மோடி.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதியன்று இரவு சென்னையில் பல நகைக்கடைகளில் மக்கள் குவிந்தனர். தங்களிடம் உள்ள பணத்தை மொத்தமாக கொடுத்து நகைகளை வாங்கிச் சென்றனர்.
கறுப்பு பணம் எல்லாம் கறுப்பு தங்கமாக மாறியது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு தகவல்கள் சென்றதைத் தொடர்ந்து, சென்னையில் பல இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டன.
பாரிமுனை என்எஸ்சி போஸ் ரோட்டில் நேற்று மாலை 6 மணியளவில் பாத்திமா ஜூவல்லரி, தனலட்சுமி ஜூவல்லரி, விக்னேஷ் ஜூவல்லரி, கவுதம் ஜெயின் ஜூவல்லரி உட்பட 10க்கும் மேற்பட்ட நகைகடைகளில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத பணம், முக்கிய ஆவணங்களை வருமான துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. நகைக்கடையில் வருமானவரித்துறை சோதனையில் ரூ. 25 கோடிக்கு நகை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. நகை விற்பனை செய்யப்பட்டதற்கான ரசீதுகளை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications