For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாமக்கல்லில் ஆளுநர் கார் மீது கறுப்பு கொடி வீச்சு- 291 திமுகவினர் கைது

நாமக்கல்லில் ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டிய 291 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

By Mathi
Google Oneindia Tamil News

நாமக்கல்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் அரசு நிர்வாக ஆய்வுப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய திமுகவினர் 291 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

291 held for black flag protest against Governor

ஆளுநர் செல்லும் மாவட்டங்களில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை திமுகவினர் நடத்துகின்றனர். நாமக்கல்லில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர். ஒருகட்டத்தில் ஆளுநர் கார் மீது கறுப்புக் கொடிகளும் வீசப்பட்டன. இதையடுத்து கறுப்புக் கொடி காட்டிய 291 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

English summary
291 cadres of DMK staged a black flag protest against Governor Banwarilal Purohit during his visit to Namakkal district were detained today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X