For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் 2 ஆவது அணு உலையில் மே முதல் உற்பத்தி தொடங்கும் - வளாக இயக்குநர் தகவல்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அணு உலையில் மே மாதம் முதல் உற்பத்தி தொடங்கும் என கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 மற்றும் 4 ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை சமீபத்தில் இந்நிலையில் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் கலந்து கொண்டார்.

2nd nuclear power plant in Kudankulam will starts in May

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார். இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்காக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது ஒப்புதல் அளித்தவுடன் மே மாதத்தில் மின் உற்பத்தி துவங்கும்" என்றும் தெரிவித்தார். மேலும், 3 வது மற்றும் 4 வது அணு உலைகளை அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் சுந்தர் தெரிவித்தார்.

English summary
Kudankulam 2nd nuclear power plat will start in May, Sundar says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X