For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க வீட்டு பாப்பாவுக்கு போலியா டிராப்ஸ் கொடுத்தாச்சா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 2வது கட்ட போலியா சொட்டு மருந்து முகாம் இன்று நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொட்டி மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு்ளனர்.

உங்கள் வீட்டில் ஐந்து வயதுக்கும் கீழான குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக இந்த சொட்டு மருந்தினைக் கொடுக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என தமிழகம் முழுவதும் இதற்காக 43,051 சொட்டு மருந்து மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

2nd phase pulse polio drops camp today

முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்றது.

காலை 7 மணி முதல் சொட்டு மருந்து கொடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. மாலை 5 மணி வரை முகாம் நடைபெேறும்.

முக்கிய பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மொத்தம் 1652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கென்று 1000 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும்.

உங்க வீட்டு பாப்பாவுக்கு டிராப்ஸ் கொடுத்தாச்சா?.. போய் அதை முதலில் பண்ணுங்க பார்ப்போம்.!

English summary
2nd phase of pulse polio drops camp held in Tamil nadu today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X