மானாமதுரை: எஸ்.ஐ மீது வெடிகண்டு வீசி கொல்ல முயற்சி- 3 பேர் கைது
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எஸ்ஐ மீது நாட்டு வெடிகுண்டை வீச முயன்றவர்கள் கைது செயயப்பட்டனர்.
சிப்காட் காவல்நிலைய எஸ்ஐ தவமுனி, இவர் இன்று காலை போலீசார் செந்தில் மற்றும் ராஜா ஆகியோருடன் மானாமதுரை -சிவகங்கை சாலையில் வேலூர் விலக்கு என்ற இடத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது கருப்புகலர் அப்பாச்சி பைக்கில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களை மறிக்க முயன்ற போது போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீச முயன்றுள்ளனர்.
தகவலறிந்து மானாமதுரை இன்ஸ்பெக்டர் பால்பாண்டி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று தைல மரக்காட்டிற்குள் பதுங்கி இருந்த மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, இரண்டு வீச்சரிவாள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் வேலூரைச் சேர்ந்த காளீஸ்வரன்(26), வினோத் கண்ணன்(23), செட்டிகுளத்தைச் சேர்ந்த ஆனந்த்பாபு(26) என தெரிய வந்தது. இதில் காளீஸ்வரன் மீது சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் சகோதரர்கள் இருவரை கொலை செய்த வழக்கும், மற்ற இருவர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. சிப்காட் எஸ்ஐ தவமுனி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தியதால் க்யூ பிராஞ்ச் போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications