பள்ளி ஆசிரியரிடம் பிக் பாக்கெட் - 3 பேருக்கு காப்பு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியரின் பர்ஸை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், டி.கான்சாபுரத்வைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மம்சாபுரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாலை இவர் தனது சொந்த ஊரான நரிக்குடி செல்வதற்காக விருதுநகர் ஆற்றுப்பாலம் பஸ்நிறுத்தத்தில் அருப்புக்கோட்டை பஸ்சில் ஏறி உள்ளார்.

பஸ்சில் பாலமுருகனுக்கு பின்னால் நின்ற 3 பேர் அவரது பர்ஸை எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இவர்களின் செய்கையால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் சுதாரித்து சகபயணிகள் உதவியுடன் 3 பேரையும் பிடித்து பஜார் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளந்திரியைச் சேர்ந்த முருகேசன், அலங்காநல்லூரை சேர்ந்த அருண்பாண்டியன், கோபிநாத் என்பது தெரியவந்தது. இதையடுதது அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகல் நேரத்திலேயே அதுவும் பயணிகள் அதிகம் இருந்த பஸ்சிலேயே பள்ளி ஆசிரியரிடம் பர்சை திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+