தேனி அருகே பயங்கர விபத்து: சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே காரும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த சீலையம்பட்டி அருகே காரும் சரக்கு வாகனமும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நாராயணன், முருகவேல், மகேஸ் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த கோர விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications