For Daily Alerts
Just In
கடன் தொல்லை: மன்னார்குடியில் விஷம் குடித்து 3 பேர் உயிரிழப்பு
கடன் தொல்லையால் மன்னார்குடியில் விஷம் குடித்து 3 பேர் பலியாகினர்.
மன்னார்குடி: கடன் தொல்லையால் மன்னார்குடியில் விஷம் குடித்த தாய், 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மன்னார்குடியைச் சேர்ந்த தமிழரசி, கணவர் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாததால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தமிழரசியையும் 2 குழந்தைகளையும் மீட்டு உறவினர்கள் தஞ்சை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த சில நாட்களாக தஞ்சை அரசு மருத்துவமனையில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழரசி, மகன் ஷ்யாம் (11), மகள் மனிஷா (9) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த தமிழரசியின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Three members of a family allegedly committed suicide in Mannarkudi.
Story first published: Wednesday, March 28, 2018, 8:15 [IST]