சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
சென்னை, கொருக்குப்பேட்டையை சேர்ந்த, சகுந்தலா அவரது மகன் சரவணன் மற்றும் மகள் கிருஷ்ணவேணி ஆகியோர் அவர்கள் வசித்த வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

தகவலறிந்த போலீசார் தற்கொலைக்கான சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்ய என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications