கொடநாடு பங்களாவில் ஜெ., சசி அறை கதவு உடைப்பு... 3 சூட்கேஸில் இருந்த முக்கிய ஆவணங்கள் எங்கே?
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகளின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 சூட்கேஸ்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் மாயமாகிவிட்டன.
Subscribe to Oneindia Tamil
கோத்தகிரி: கொடநாடு எஸ்டேட் பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 சூட்கேஸ்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் மாயமாகிவிட்டன.
நீலகிரி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக உள்ள ஓம்பகதூர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலா அறைகள் உடைக்கப்பட்டிருந்தாகவும், அங்கிருந்த 3 சூட்கேஸ்களும் உடைக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாகி இருக்கலாம் என்றும் காவலாளிகளை தாக்கியவர்கள் அதை திருடிச் சென்றிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications