டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி... பெற்றோர்கள் மருத்துவமனை முற்றுகை
சென்னை: சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த துப்புரவு பணியாளரின் மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கு தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலாங்கரையைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் சம்பத். அவரது 3 வயது மகள் ப்ரதீபா. காய்ச்சல் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுமிக்கு டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது, அவர்களுடைய மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால், அரசு மருத்துவமனைக்கு செல்லத் தேவையில்லை என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு சிறுமி ப்ரதீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் எனக்கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சிறுமியின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications