சென்னை தண்டையார்பேட்டையில் 3 வயது குழந்தை கடத்தல்...
சென்னை தண்டையார்பேட்டையில் 3 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தண்டையார்பேட்டையில் தெருவில் விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தையை மர்மநபர் ஒருவர் சைக்கிளில் கடத்தி சென்றார்.
தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், 2-ஆவது தெருவை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (33). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகம் அருகே, துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி பர்கத் நிஷா (27). இவர்களது குழந்தை முகமது சாது (3).

முகமது சாது நேற்று பிற்பகல் தனது வீட்டின் அருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது குழந்தையை திடீரென காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீஸில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்கள். நேதாஜி நகர், முதல் தெரு மற்றும் 2-ஆவது தெருவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், குழந்தை முகமது சாதுவை சைக்கிளின் முன்பக்கம் வைத்து கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications