அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடியில் 30 பேருக்கு தொடர்பு
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடியில் 30 பேருக்கு தொடர்பிருந்ததாக கூறப்படுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். இதில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் உமாவுக்கு உடந்தையாக இருந்த உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சிவகுமார் மற்றும் விஜயகுமாரிடம் 2-ஆவது முறையாக லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் ஊழியர்கள், பேராசிரியர்கள் , உதவி பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என மேலும் 30 பேருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications