கிரீன்வேஸ் ரோடு, எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷனில் 300+ குழந்தைகள், பெண்கள்: உதவி தேவை
சென்னை: சென்னை கிரீன்வேஸ் ரோடு, எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷனில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் தேவைப்படுகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து கனமழை பெய்தது. இதனால் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் மீண்டும் வெள்ளக்காடாகியுள்ளன.
கிரீன்வேஸ் ரோடு, MRTS ஸ்டேஷனில் 300+ குழந்தைகள் & பெண்கள் உள்ளனர்பால், உணவு, குடிநீர் தேவை#chennairains pic.twitter.com/CI9xUtuchR
— AJITH SARATH (@ajith_sarath) December 2, 2015 பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து கழுத்து அளவு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றார்கள். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகிறார்கள்.
#ChennaiFloods Contact 0446555552 - 8939022249 for medicines and drinking water, they're open. #chennairains pic.twitter.com/LBJLG2QljP
— Rohit Joshi (@emceeaarjay) December 2, 2015 இந்நிலையில் உதவி கேட்டு அஜீத் சரத் என்பவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கிரீன்வேஸ் ரோடு, எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷனில் 300+ குழந்தைகள் & பெண்கள் உள்ளனர்
பால், உணவு, குடிநீர் தேவை #chennairains என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications