தூத்துக்குடி கடலில் ஆயுதங்களுடன்.. 33 அமெரிக்க கப்பல் ஊழியர்கள் நிபந்தனை ஜாமீன்
மதுரை: தூத்துக்குடி கடலில் ஆயுதங்களுடன் கடந்த ஆண்டு பிடிபட்ட அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 33 பேருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் கடந்த ஆண்டு நவம்பர், 12-ம் தேதி ஆயுதங்களுடன் நுழைந்த, அமெரிக்க தனியார் கப்பல் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான, 'சீமேன் கார்டு ஓகியோ' என்ற கப்பலை, இந்திய கடலோரக் காவல் படையினர் சிறை பிடித்தனர்.
கப்பலில் இருந்த, 10 மாலுமிகள், 25 பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கில், அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 33 பேருக் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் வழங்கப்பட்ட 33 பேரும் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
அதேசமயம் அமெரிக்க கப்பலின் கேப்டன் உள்ளிட்ட இருவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications