For Daily Alerts
Just In
கீழக்கரையில் விபரீதம்... ஒரே பைக்கில் சென்ற 4 சிறுவர்கள் மினி லாரி மோதி பலி
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருசக்கர வாகனத்தின் மீது மினிலாரி மோதியதில் இருசக்கரவாகனத்தில் சென்ற 4 பேரும் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஒரே பைக்கில் நான்கு சிறுவர்கள் பயணித்துள்ளனர். அப்போது ராமேஸ்வரத்திலிருந்து மீன்களை ஏற்றிச்சென்ற மினி லாரி, கீழக்கரையில் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில் நான்கு சிறுவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சிறுவர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு சிறுவர்கள் பலியான சம்பவம் கீழக்கரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
4 Children were died when a Road accident in which they were travelling Keelakarai near Ramanathapuram on Saturday.
Story first published: Sunday, June 19, 2016, 15:10 [IST]