For Daily Alerts
Just In
தருமபுரியில் லாரி மீது கார் மோதி விபத்து- 4 பேர் பரிதாப பலி
தருமபுரி: தருமபுரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தும்கூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்வதற்காக தருமபுரி வழியாக 11 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
பழைய தருமபுரியில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.
இதில், 1 குழந்தை மற்றும் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Car got accident in Dharmapuri 4 people died in this accident.
Story first published: Friday, April 8, 2016, 10:20 [IST]