ஏரியில் மூழ்கி 4 சிறார்கள் பரிதாப மரணம்
Subscribe to Oneindia Tamil
செஞ்சி: ஏரியில் குளிக்கப் போன 3 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தில் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு இன்று மூன்று சிறுவர்களும், ஒரு சிறுமியும் குளிக்கப் போயுள்ளனர்.
அப்போது ஏரியின் ஆழம் தெரியாமல், அவர்கள் ஆழமான பகுதிக்குள் இறங்கி குளித்தனர். அப்போது நான்கு பேரும் நீரில் மூழ்கி விட்டனர். நீரில் மூழ்கிய அவர்கள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications