தமிழகத்தில் 4 புதிய தாலுகாக்கள் உதயம்
சென்னை: தமிழகத்தில் புதிதாக நான்கு தாலுகாக்கள் உருவாக்கப் பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகாவை பிரித்து, காளையார் கோவில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவை பிரித்து வெண்பாக்கம், சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகாவை பிரித்து பெத்தநாயக்கன்பாளையம், கடலுார் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவை பிரித்து புவனிகிரி என புதிதாக நான்கு தாலுகாக்கள் துவக்கப்படும் சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, புதிய தாலுகாக்கள், இம்மாதம் துவக்கப்பட்டுள்ளன. அதன் விபரமாவது :
- காளையார்கோவில் தாலுகாவில், நாட்டரசன்பேட்டை, காளையார்கோவில், சிலுக்கப்பட்டி, மறவமங்கலம், மல்லல் ஆகிய குறு வட்டங்கள்
- வெண்பாக்கம் தாலுகாவில், வெம்பாக்கம், துாசி, நாட்டேரி, பெருங்கட்டூர் ஆகிய குறு வட்டங்கள்
-பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில்,பெத்தநாயக்கன்பாளையம், எத்தாப்பூர், கல்வராயன்மலை ஆகிய குறு வட்டங்கள்
- புவனகிரி வட்டத்தில், புவனகிரி, சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை ஆகிய குறுவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications