கடையநல்லூர் அருகே கார் மீது லாரி பயங்கர மோதல் - 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பயணம் செய்த கார் இன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள்.

சென்னையைச் சேர்ந்தவர் அலி இப்ராகிம். 64 வயதான இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஷாகுல் மா. 60 வயது. இவர்கள் இருவரும் தங்களது மகள் லெக்சிகா மற்றும் லெக்சகாவின் மகன் 6 வயது ரிஸ்கான், மகள் 5 வயது ஜஸ்ரா ஆகியோருடன் ஈரோட்டுக்கு காரில் சென்றனர்.

அங்கு வசித்து வரும் இப்ராகிமின் இன்னொரு மகளான இஷானை அவரது வீட்டில் பார்த்தனர். பின்னர் இஷானையும் அழைத்துக் கொண்டு காரில் நெல்லை சென்றனர். காரை இப்ராகிம் ஓட்டி வந்தார். முன் பக்க இருக்கையில் இரு பேரக் குழந்தைகளையும் அமர வைத்துள்ளனர். பின் இருக்கையில் இப்ராகிமின் மனைவி மற்றும் மகள்கள் பயணித்துள்ளனர்.

4 persons including two kids killed in accident near Kadayanallur

கார் கடையநல்லூர் பகுதியில் வந்தபோது திடீரென ஒரு லாரியுடன் பலமாக மோதி விட்டது. இதில் காரின் முன் இருக்கையில் பயணித்த இப்ராகிம், அவரது மனைவி மற்றும் இரு பேரக் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இரு மகள்களும் படுகாயமடைந்த நிலையில் நெல்லை, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+