மோடி இருக்கும்வரை யாரும் மிரட்ட முடியாது..திமுகவில் 40 ஸ்லீப்பர் செல்கள்: ராஜேந்திர பாலாஜி பேச்சு
திமுகவில் 40 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணியின் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
Recommended Video

பெரியகுளம்: பிரதமர் மோடி இருக்கும்வரை எங்களை யாருமே மிரட்ட முடியாது; திமுகவில் எங்களது ஸ்லீப்பர் செல்களாக 40 எம்.எல்க்.ஏக்கள் உள்ளனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே பெரியகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:

அதிமுகவுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதை பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார். மோடி இருக்கும் வரை அதிமுக கட்சியும் சின்னமும் நம்மிடம்தான் இருக்கும்.
ஆகையால் எந்த பிரச்சனை வந்தாலும் மேலே உள்ளவர் நம்மைப் பார்த்துக் கொள்வார். நாம் கவலையே படவேண்டாம்.
திமுகவிலும் எங்களது ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர். அங்கே இருக்கும் 40 ஸ்லீப்பர் செல்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.
பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக இயங்குவதாக விமர்சிக்கப்படும் நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலஜியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications