வள்ளியூரில் விவசாயியிடம் ரூ.40 லட்சம் பணமோசடி - கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு
விவசாயியின் வங்கி பணத்தை மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வள்ளியூர்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் விவசாயியின் வங்கிக் கணக்கில் இருந்து 40 லட்ச ரூபாயை மோசடி செய்ததாகக் கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாங்குநேரி அருகே நல்லான்குளத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவருக்கு வள்ளியூர் சாமியார் பொத்தை அருகில் 2 புள்ளி மூன்று ஏழு ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. கடன் காரணமாக தனது இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்து, முத்து கிருஷ்ணா ட்ரஸ்டிற்கு 1 கோடியே 74 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை விற்பனை செய்தார்.

4 வரைவோலைகளாகக் கணேசனிடம் முத்துக்கிருஷ்ணா டிரஸ்ட் நிர்வாகத்தினர் கொடுத்துள்ளனர். 3 வரைவோலைகளை இந்தியன் வங்கியில் உள்ள தனது கணக்கில் கணேசன் செலுத்தியுள்ளார். ஒரு வரைவோலையை வள்ளியூர் கரூர் வைஸ்யா வங்கியில் கணக்குத் தொடங்கி அதில் போடலாம் என நிலத் தரகர்களான வைகுண்டதாசும், ராஜேசும் கூறியுள்ளனர்.
வங்கி மேலாளர் முத்துசாமி பல்வேறு படிவங்களில் கணேசனிடம் கையெழுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. 2 நாட்களுக்குப் பின் வரைவோலைப் பணம் கணக்கில் உள்ளதா எனக் கணேசன் பார்த்தபோது சுமார் 40லட்சம் ரூபாயைக் கணக்கிலிருந்து எடுத்திருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், மீதி பணம் பற்றி வங்கி மேலாளரிடம் கேட்டதற்கு வைகுண்டதாசிற்கு 8 லட்சம் ரூபாய், ராஜேஷுக்கு 7 லட்சம் ரூபாய் என பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இந்த பண மோசடி குறித்து விவசாயி கணேசன் வள்ளியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வங்கி மேலாளர் முத்துசாமி உட்பட 4 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications