வள்ளியூரில் விவசாயியிடம் ரூ.40 லட்சம் பணமோசடி - கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு
விவசாயியின் வங்கி பணத்தை மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வள்ளியூர்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் விவசாயியின் வங்கிக் கணக்கில் இருந்து 40 லட்ச ரூபாயை மோசடி செய்ததாகக் கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாங்குநேரி அருகே நல்லான்குளத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவருக்கு வள்ளியூர் சாமியார் பொத்தை அருகில் 2 புள்ளி மூன்று ஏழு ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. கடன் காரணமாக தனது இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்து, முத்து கிருஷ்ணா ட்ரஸ்டிற்கு 1 கோடியே 74 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை விற்பனை செய்தார்.

4 வரைவோலைகளாகக் கணேசனிடம் முத்துக்கிருஷ்ணா டிரஸ்ட் நிர்வாகத்தினர் கொடுத்துள்ளனர். 3 வரைவோலைகளை இந்தியன் வங்கியில் உள்ள தனது கணக்கில் கணேசன் செலுத்தியுள்ளார். ஒரு வரைவோலையை வள்ளியூர் கரூர் வைஸ்யா வங்கியில் கணக்குத் தொடங்கி அதில் போடலாம் என நிலத் தரகர்களான வைகுண்டதாசும், ராஜேசும் கூறியுள்ளனர்.
வங்கி மேலாளர் முத்துசாமி பல்வேறு படிவங்களில் கணேசனிடம் கையெழுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. 2 நாட்களுக்குப் பின் வரைவோலைப் பணம் கணக்கில் உள்ளதா எனக் கணேசன் பார்த்தபோது சுமார் 40லட்சம் ரூபாயைக் கணக்கிலிருந்து எடுத்திருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், மீதி பணம் பற்றி வங்கி மேலாளரிடம் கேட்டதற்கு வைகுண்டதாசிற்கு 8 லட்சம் ரூபாய், ராஜேஷுக்கு 7 லட்சம் ரூபாய் என பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இந்த பண மோசடி குறித்து விவசாயி கணேசன் வள்ளியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வங்கி மேலாளர் முத்துசாமி உட்பட 4 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications