வெள்ளச் சேதத்தைக் கணக்கெடுக்க அதிகாரிங்க வர்றாங்க... தயாராக இருங்கள்
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் 400 குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி கடந்த 9-ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிகாரிகள் மூலம் சென்னை மாநகராட்சியின் 200 வட்டங்களிலும் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் இரண்டு கண்காணிப்பாளர்கள், ஒரு வருவாய் அதிகாரி, ஒரு சார் ஆட்சியர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட இரண்டு குழு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தக் குழுவுடன் போலீசாரும் பாதுகாப்புக்குச் செல்கின்றனர். இப் பணியில் உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் ஈடுபடுத்தப்படவில்லை.
இந்தக்குழு வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு செல்லும் போது, அங்குள்ள பொதுமக்களே பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காட்டுகின்றனர். அதன்படி, கணக்கெடுக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications