300 கோடி டிஸ்கவுண்ட்.. 950 கோடி வளர்ச்சி.. பாபா ராம்தேவ்விற்கு பாஜக அரசு உதவி.. புதிய முறைகேடு !
பாபா ராம்தேவ் எடுத்த நில ஏலத்தில் மத்திய பாஜக அரசு செய்த உதவி செய்து இருப்பதாக புகார் எழுந்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: பாபா ராம்தேவ் எடுத்த நில ஏலத்தில் மத்திய பாஜக அரசு செய்த உதவி செய்து இருப்பதாக புகார் எழுந்து இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் இந்த முறைகேடு நடந்து இருக்கிறது.
அதேபோல் பதஞ்சலி நிறுவனமும் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பெரிய அளவில் லாபம் ஈட்டி இருக்கிறது. 4 வருடத்தில் இமாலய வளர்ச்சி அடைந்து இருக்கிறது.
ராய்ட்டர்ஸ் என்று ஆங்கில ஊடகம் இந்த முறைகேட்டை கண்டுபிடித்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்திற்கு எப்படி எல்லாம் உதவி அளிக்கப்பட்ட உள்ளது என்று கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

வளர்ச்சி
2013ல் பாஜக ஆட்சிக்கு வரும் முன் வருடம் முழுக்க பாபா ராம்தேவ் 1000 கோடி வரை வியாபாரம் செய்து இருக்கிறார். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் 950 கோடி வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. மொத்தமாக அந்த வருட இறுதியில் 2100 கோடி வரை வியாபாரம் செய்துள்ளார்.

முந்தைய ஆட்சி
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அந்த நிறுவனம் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. அப்போது 100 கணக்கில் நிலத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் பாஜக வந்த பின்பே அந்த நிறுவனம் நிலம் வாங்கி வளர்ச்சி அடைந்துள்ளது.

நிலம் எவ்வளவு
முக்கியமாக பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே நிலம் வாங்கி இருக்கிறார். நிலம் விற்கப்பட்ட ஏலத்தில் எல்லாம் அவருக்கு கடைசியாக பணம் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300 கோடி வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. 2000 ஏக்கர் நிலம் வரை வாங்கி இருக்கிறார்.

அதிகம்
மார்க்கெட் விலையை விட 77 சதவிகித ஒதுக்கீட்டில் நிலம் வாங்கி இருக்கிறது. இதில் அதிகமாக மத்திய பிரதேசத்தில் நிலம் வாங்கி இருக்கிறார். மேலும் இவர் சென்ற வருடம்தான் கோடிஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications