திருவண்ணாமலை: டீ கடையில் பஸ் புகுந்து விபத்து 5 பேர் பலி, 3 பேர் படுகாயம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அரசுப் பேருந்து மோதியதில் சாலையோற டீ கடையில் நின்றிருந்த 5 பேர் உயிரிழந்தனர்.
மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று தென் மாத்தூரில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோற தேனீர் கடைக்குள் புகுந்தது. இதில் டீக்கடையில் நின்று கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கால் முறிவு ஏற்பட்ட 3 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. விபத்து காரணமாக திருவண்ணாமலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் பேருந்து விபத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே அரசுப் பேருந்து மோதியதில் சாலையோற கடையில் நின்றிருந்த 5 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications