சங்கரன்கோவில் அருகே ஷாக்.. கண் இமைக்கும் நேரத்தில்.. பள்ளி வேன்- கார் பயங்கர மோதல்- 5 பேர் பலி
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒப்பனையாள்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒரு காரில் சென்று திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்துள்ளனர்.

திருச்செந்தூரில் சாமிதரிசனத்தை முடித்துவிட்டு,மீண்டும் சொந்த ஊரான ஒப்பனையாள்புரத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே பள்ளிக்குழந்தைகளுடன் பள்ளி வேன் ஒன்றும் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலும் சிதைந்ததால் அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்,
இதனிடையே இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விபத்து நடந்த பகுதிக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சாம்சன் நேரில் சென்று ஆய்வு செய்தார். விபத்தில் சிக்கிய வாகனங்கள் பொக்லைன் வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டது.
இந்நிலையில் பள்ளி வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அதில் பெட்ரோல் பங்க் அருகே பள்ளி வேன் திரும்பியபோது, எதிரே வேகமாக வந்த கார், வேன் மீது பயங்கரமாக மோதுவதாக சிசிடிவி காட்சியில் தெரிகிறது. மோதிய வேகத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications