புதுச்சேரியிலும் பரவும் பன்றிக் காய்ச்சல்...
Subscribe to Oneindia Tamil
புதுவை: புதுச்சேரியில் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் நாட்டின் இதர பகுதிகளைப் போல புதுவையிலும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.

இதுகுறித்து ராமன் கூறுகையில், பன்றிக் காய்ச்சலுக்கு வேண்டிய மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. கோரிமேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் போதுமான கையிருப்பு உள்ளன. பன்றிக் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
பன்றிக் காய்ச்சல் நோய்க்கு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியாகி வருகின்றனர். டாமி புளூ மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டாலும் பன்றிக்காய்ச்சல் பலிகளும், பாதிப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications