மகா புஷ்கரத்தில் விபரீதம்... ஒரே நாளில் காவிரி ஆற்றில் குளித்த 5 பேர் பலி!
மகா புஷ்கர நாளில் காவிரி ஆற்றில் குளித்த 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

கும்பகோணம்: மகா புஷ்கரத்தை முன்னிட்டு கும்பகோணம் மற்றும் ஈரோட்டில் காவிரி ஆற்றில் குளித்த 5 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள மேலக்கொட்டையூர் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று சென்றுள்ளனர். அப்போது, குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கி உள்ளனர்.

இதையடுத்து கால் தவறி விழுந்த 5 பேரும் தண்ணீரில் விழுந்தனர். அப்போது நீரில் மூழ்கி விமல்ராஜ்(7), சவுமியா(12), நாகலட்சுமி(34) ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற 2 பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற காவிரி புஷ்கரத்தின்போது ஆற்றில் குளித்த இருவர் பலியாகிவிட்டனர். பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோயிலில் புஷ்கரம் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்க சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் கவியரசன் ஆகியோர் நேற்று சென்றனர். அப்போது இருவரும் காவிரியாற்றில் நீராட இறங்கினர். பின்னர் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து சித்தோடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications