இழுத்து மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகள்... ஊழியர்களுக்கு மாற்றுப் பணி ஒதுக்கீடு!
சென்னை: தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக் கடைகளை இன்று முதல் முதல் மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மூடப்படும் கடைகளில் பணியாற்றக் கூடிய கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் ஆகியோர் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்துக்குள்ளேயே வேறு கடைகளின் காலிப் பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணிக்குப் பதிலாக நண்பகல் 12 மணியாக, இரண்டு மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 500 டாஸ்மாக் மதுக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதன்படி, மண்டல வாரியாக மூடப்படும் கடைகளின் எண்ணிக்கை விவரங்களை டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

ஊழியர்களுக்கு மாற்றுப் பணி
மூடப்படும் கடைகளில் பணியாற்றக் கூடிய கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் ஆகியோர் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்துக்குள்ளேயே வேறு கடைகளின் காலிப் பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர்.

கூடுதல் கண்காணிப்பாளர்
மே மாத காலத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.3 லட்சம் அல்லது அதற்கு மேல் விற்பனையாகி இருக்கக் கூடிய கடைகளில் கூடுதலாக ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவர்.

உதவி விற்பனையாளர்
ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் சராசரி விற்பனையாகி இருக்கக் கூடிய கடைகளில் கூடுதலாக ஒரு விற்பனையாளர் அல்லது உதவி விற்பனையாளர் நியமனம் செய்யப்படுவார்.

பணி நியமன உத்தரவு
ஒரு மண்டலத்துக்கு உட்பட்ட வேறு மாவட்டங்களில் கண்காணிப்பாளர்களோ, விற்பனையாளர்களோ, உதவி விற்பனையாளரோ பணிசெய்ய விரும்பினால் அங்குள்ள காலிப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவர். இதற்கான பணி நியமன உத்தரவை மூத்த மண்டல மேலாளர் அளிப்பார்.

கண்காணிப்பாளர்களுக்கு பணி
ஏழு கண்காணிப்பாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலங்களிலோ, மாவட்ட மேலாளர்களுக்கு உதவும் வகையிலோ பணியமர்த்தப்படலாம். அவர்களுக்கான பணி வரையறைகள் பின்னர் வெளியிடப்படும். மேலும் 10 கண்காணிப்பாளர்கள் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பறக்கும் படைகளில் பணி நியமனம் செய்யப்படலாம்.

10 சதவிகிதம் இட ஒதுக்கீடு
மூத்த மண்டல மேலாளர் அலுவலகங்களில் 10 கண்காணிப்பாளர்கள் பணி நியமனம் செய்யப்படலாம்.
விடுப்பினாலோ, பணியாளர்கள் விடுவிக்கப்படுவதாலோ ஏற்படும் காலிப் பணியிடங்களில் கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்படும் போது ஒவ்வொரு பிரிவிலும் 10 சதவீதம் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்.

வேறு மண்டலங்களில் பணி
ஒரு மண்டலத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அது குறித்த விவரங்களை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த ஊழியர்கள் வேறு மண்டலங்களில் உள்ள கடைகளில் பணியமர்த்தப்படுவர். இந்த உத்தரவுகளை அப்படியே மாறாமல் பின்பற்ற வேண்டும் என்று கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications