For Daily Alerts
Just In
தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு: பினராயி விஜயன்
தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: ஓகி புயலில் சிக்கிய தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:
கடலில் தத்தளித்த 393 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், திருச்சூரைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த 100 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் லட்சத் தீவில் 138 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
English summary
Kerala chief minister Pinarayi Vijayan said that 531 fishermen have been rescued on Saturday.
Story first published: Sunday, December 3, 2017, 9:27 [IST]