சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 58 வயதான சீனிவாசன் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கான தலைநகர் ஹைதராபாத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். டெல்லி உட்பட நாட்டின் சில பகுதிகளிலும் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.

58-year-old dies of swine flu in Chennai

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 58), பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு டாமிப்ளூ மருந்து வழங்கப்பட்டது. ஆனால் அது அவருக்கு பலனளிக்கவில்லை. இதனால் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்துவிட்டார்.

இதை உறுதி செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சீனிவாசனுக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மருத்துவமனை அளித்த எச்சரிக்கையை மீறியும் அவர் சிகிச்சையை பாதியில் நிறுத்தியுள்ளார்.

பின்னர் அவர் இங்கு வரும்போது அவருக்கு நோய் மிகவும் முற்றியிருந்தது. ஆகையால் கிருமிகள் கட்டுப்படவில்லை. இதனால் அவர் உயிரிழந்தார் என்று கூறியுள்ளனர்.

சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+