தர்மபுரி: அரசு மருத்துவமனையில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 பச்சிளம் குழந்தைகள் மரணம்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் 12 மணிநேரத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலத்துறை சார்பில் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து வசதிகளுடன் இலவச ஆம்புலன்சும் ஒதுக்கப்பட்டுள்ளது.

6 infants die in Dharmapuri govt hospital in 12 hours

இதன் மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் இருந்தும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று அதிகாலை 7 மணி வரை 12 மணி நேரத்தில் பச்சிளங் குழந்தைகள் பிரிவில் இருந்த6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

ஈச்சம்பட்டி, மருக்காளம்பட்டி, கோபிநாதம்பட்டி, பைசு அள்ளிபுதூர் மற்றும் ஓசூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களை சேர்ந்த குழந்தைகள் இறந்து விட்டனர். சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+