சென்னை கலவரம்.. தீவைப்பில் ஈடுபட்டதாக கூறி கைதான 60 பேருக்கு 15 நாட்கள் சிறை!
சென்னையில் வன்முறை தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 60 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழக தலைநகரான சென்னையில் நேற்று மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு காவல்நிலையம் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறை தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.
ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையம் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 50 வாகனங்கள் தீக்கிரையாகின. போலீஸ் நிலையமும் தீ வைக்கப்பட்டது. அங்கு இருந்த போலீசாரை, ஜன்னலை உடைத்து காப்பாற்றினர்.

எம்.கே.பி. நகரில் மர்மநபர்கள் டெம்போ வேனை தீவைத்துக் கொளுத்தினர். இதையடுத்து வியாசர்பாடியில் இருந்து தீயணைப்பு வண்டி வந்தது. தீயை அணைக்க முற்படும்போது சிலர் தீயணைப்பு வண்டியையும் கொளுத்தினர். இதில் தீயணைப்பு வண்டியின் முன்பக்கம் எரிந்து நாசமானது. போலீஸ் டெம்போ வேன் முற்றிலும் எரிந்தது நாசமானது.
அரும்பாக்கம் நூறடி சாலை எம்எம்டிஏ பேருந்து நிறுத்தம் அருகே 50க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன் கலைந்துபோகும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த கும்பல் இன்ஸ்பெக்டரை தாக்கியது. மேலும் அங்கிருந்த போலீஸ் டெம்போ வேனை தீ வைத்து எரித்தது.
மதுபானக் கடை எரிப்பு, காவல் நிலைய எரிப்பு தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டனர். இரு குழுக்களாக கைது செய்யப்பட்ட 60 போரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை சர்மா நகரில் மதுபானக் கடையை எரித்ததாக 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸாரே தீவைத்ததாக வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார்கள் உலா வரும் நிலையில் போலீஸார் கைது செய்த 60 பேருக்கும் சிறைக் காவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications