சென்னை கலவரம்.. தீவைப்பில் ஈடுபட்டதாக கூறி கைதான 60 பேருக்கு 15 நாட்கள் சிறை!
சென்னையில் வன்முறை தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 60 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழக தலைநகரான சென்னையில் நேற்று மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு காவல்நிலையம் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறை தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.
ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையம் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 50 வாகனங்கள் தீக்கிரையாகின. போலீஸ் நிலையமும் தீ வைக்கப்பட்டது. அங்கு இருந்த போலீசாரை, ஜன்னலை உடைத்து காப்பாற்றினர்.

எம்.கே.பி. நகரில் மர்மநபர்கள் டெம்போ வேனை தீவைத்துக் கொளுத்தினர். இதையடுத்து வியாசர்பாடியில் இருந்து தீயணைப்பு வண்டி வந்தது. தீயை அணைக்க முற்படும்போது சிலர் தீயணைப்பு வண்டியையும் கொளுத்தினர். இதில் தீயணைப்பு வண்டியின் முன்பக்கம் எரிந்து நாசமானது. போலீஸ் டெம்போ வேன் முற்றிலும் எரிந்தது நாசமானது.
அரும்பாக்கம் நூறடி சாலை எம்எம்டிஏ பேருந்து நிறுத்தம் அருகே 50க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன் கலைந்துபோகும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த கும்பல் இன்ஸ்பெக்டரை தாக்கியது. மேலும் அங்கிருந்த போலீஸ் டெம்போ வேனை தீ வைத்து எரித்தது.
மதுபானக் கடை எரிப்பு, காவல் நிலைய எரிப்பு தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டனர். இரு குழுக்களாக கைது செய்யப்பட்ட 60 போரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை சர்மா நகரில் மதுபானக் கடையை எரித்ததாக 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸாரே தீவைத்ததாக வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார்கள் உலா வரும் நிலையில் போலீஸார் கைது செய்த 60 பேருக்கும் சிறைக் காவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications