ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலில் முதியவர் கொலை: சைக்கோ கொலையாளி கைது
Subscribe to Oneindia Tamil
ஜோலர்பேட்டை: ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலில் 60 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவரின் மர்ம உறுப்பை கடித்து கொன்ற சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இன்று காலை பயணிகள் ரயில் வந்தது. திருப்பத்தூர் அருகே ரயில் வந்த போது அதில் ஒரு பெட்டியில் வந்த முதியவருடன் வடமாநில இளைஞர் ஒருவர் தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த முதியவரை கீழே தள்ளி கடித்து கொலை செய்துவிட்டார்
கொலையாளியின் வெறிச்செயலை கண்டு பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஜோலார்பேட்டை போலீசார் அந்த வடமாநில இளைஞரை கைது செய்தனர். அவர் ஒரு சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications